”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)

2012 ‍ டிசம்பர் 21ல் உலகம் அழியுமா? குர்ஆன் பொய் சொல்லாது!

அண்மைக் காலமாக சில ஊடகங்களில் அடிக்கடி வெளியாகும் செய்தி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் திகதி உலக முடிவு நாளாகும் என்பதே.   இந்தச் செய்திகளால் பாமர மக்கள், குறிப்பாக மாணவப் பருவத்தினர்  நம்பிக்கை இழந்து இனி படித்துப் பிரயோசனமும் இல்லை. பரீட்சை எழுதிப் பலனும் இல்லை என்று மிகக் கவலையோடு சொல்லி வருகின்றனர். கேட்டும் வருகின்றனர்.
 இவர்களுக்கு அளித்த ஆணித்தரமான பதிலை ஏனையோரும் அறிய வேண்டும் என்பதற்காக இங்கே குறிப்பிடுகின்றேன்.  உலக முடிவு திகதியை எவருக்கும் சரியாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல முடியாது என அல்லாஹ் திருக் குர்ஆனில் திட்டவட்டமாகக் கூடியுள்ளான்.
   குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட நல்லுபதேசமாகும். ஆகவே உலக முடிவு பற்றிய உண்மையை குர்ஆன் ஆதாரத்தை கொண்டே எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
   திருக் குர்ஆனில் (68ம் அத்தியாயம் 52ம் வசனத்தில்) உலக மக்கள் அனைவருக்கும் குர்ஆன் ஒரு நல்லுபதேசம் என கூறுகின்றது.
   இந்த நல்லுபதேசமான  குர் ஆனில் (7ம் அத்தியாயம் 187ம்  வசனத்தில்) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  "அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்?" என்று கேட்கிறார்கள் நீர் கூறும் அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத்தவிர வேறு எவரும் வெளிப்படுத்த முடியாது"........
குர்ஆன் பொய் சொல்லாது. பயப்பட வேண்டாம்.

2012 டிசம்பர் 22ந் திகதி மீண்டும் ஒருமுறை இந்தச் செய்தியைப் பார்த்தால் குர்ஆனில் சொல்லப்பட்டவை உண்மை என்பதை எவரும் அறியலாம்.
Share this article on :
 
© Copyright 2010-2011 ஜும்ஆ All Rights Reserved.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.