குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்ததை தொடந்து அது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதும் உரிய நேரத்தில் சமூக தலைமைகளும் , அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இன்று பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் முழு அளவில் இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித்திற்கு தேவையான போது போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது என்று பாத்தியா மாவத்தை மஹல்லா வாசிகள் தெரிவித்தனர்.
பெளத்த பிக்குகள் தலைமயிலான ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து தற்போது அந்த குறித்த மதரஸா மற்றும் மஸ்ஜித் போலீசாரினால் மூடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது .


